• Register
  • Login
  • Forgot Password?
  • My Profile
  • Choose An Icon
  • Upload An Icon
  • Messenger
  • Member Search
  • Who's Online
    Members: 1601

    ONLINE:
    Members: 0
    Anonymous: 1
    Today: 4
    Newest Member:
    Joseph Mahabir
  • You are here: Blogs Directory / Apologetics / “கிறிஸ்தவம்,கிறிஸ்தவன்” தள பதிவுகள் Welcome Guest
    “கிறிஸ்தவம்,கிறிஸ்தவன்” தள பதிவுகள்
          “கிறிஸ்தவம்,கிறிஸ்தவன்” தளத்தின் இடுகைகள், பதிவுகள் என்பவற்றின் தொகுப்பு.

    Thu, Jan 10th - 10:58AM

    சுத்த தங்கம் எது? போலி தங்கம் எது?



    வேதாகமம் அல்லது குர்ஆன் இவ்விரண்டில் ஏதோ ஒன்று தான் உண்மையாக இருக்கமுடியும், இவை இரண்டில் ஒன்று சுத்த தங்கம். மற்றொன்று போலி. ஆனால் உண்மை மார்க்கம் எது? உண்மை வேதம் எது? என்ற வினாவுடன் சத்திய உண்மைகளைத் தேடுகின்ற இதயங்களுக்கு இறைவன் சரியான மார்க்கத்தை காண்பிக்க வல்லவனாகவே இருக்கின்றான். 

    மெய் மார்க்கத்தை அறிய விரும்பும் என் அன்பு நண்பரே, சகல அண்ட சராசரங்களையும் படைத்த இறைவனிடம் முதலில் உன் பிரார்த்தனையை பின்வருமாறு ஏறெடுத்தபின் அதனைக் குறித்து நீர் ஆராய்ந்து அறிய முற்படுவீராக. ஏனென்றால் இறைவன் தமது வழியை உனக்கு காண்பிக்காவிட்டால், நான் என்னதான் கூறினாலும் அதனால் பயனில்லை. எல்லாம் வல்ல இறைவன் உனக்கு சத்திய வழியைக் காண்பிப்பார். ஆகவே முதலில் நீர் உளமாற பிரார்த்தனை செய்வீராக. 

    மேலும் படிக்க...http://kristhavan.blogspot.com/2012/10/blog-post_19.html


    Comment (0)

    Thu, Jan 10th - 10:55AM

    சதா திடுக்கிடும் இஸ்லாமியர்



    எமது பூமியிலே உள்ள ஒரு கூட்டம் மக்கள், கடந்த 2700 ஆண்டுகளாக சதா  திடுக்கிட்ட வண்ணமே உள்ளனர் என்றால் அதை உங்களால் நம்பமுடியுமா? அந்த கூட்டத்தில் உலகிலுள்ள சகல ஜாதிகளும் இணைந்திருந்தாலும் இஸ்லாமியரே இரவிலும் பகலிலும், வீட்டிலும் வெளியிலும், சந்தையிலும் பள்ளியிலும் வேலைத்தலத்திலும் சயன அறையிலும்……….  அவர்கள் திடீர் திடீர் என திடுக்கிட்டு………… பேயறைந்த முகத்துடன் விழிபிதுங்கிய கண்களுடனும் பேந்தப்பேந்து காணப்படுகின்றனர் என்று கூறினால் அதை நீங்கள் நம்பிதான்
    ஆக  வேண்டும்.
                          என்ன? எழுதுவதற்கு ஒன்றுமே இல்லாவிட்டால் இப்படியா எழுதி எம்மைப் பயமுறுத்தி, திடுக்கிடவைப்பது என நீங்கள் என்மேல் சீறிவிழ வேண்டாம். இஸ்ரேலியரை எதிர்க்கும் எதிரிகள் எவர்களோ……………….. அவர்கள் ஒவ்வொருவரும் சதா திடுக்கிட்டு எழுதுவதாக பரிசுத்த வேதாகமம் கூறுவதனாலேயே………………. அதை உங்களுக்கு காண்பிக்க நான் இதை எழுதியுள்ளேன்.
    மேலும் படிக்க... http://kristhavan.blogspot.com/2012/10/2700.html


    Comment (0)

    Thu, Jan 10th - 10:50AM

    கிறித்தவமும் மற்ற மார்க்கங்களும்



    யுரோப் தனது பதினைந் தாம் நூற்றாண்டில் ஒரு மிக பெரிய வரலாற்று நாயகனை உண்டாக்க போகிறது என்பதை தாமதமாக உணர்ந்தது. அது ப்ரோடஸ்தண்டை உருவாக்கிய மார்ட்டின் லூதர் அவர்கள் தான்.கர்த்தர் இவர் மூலமாக விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற சத்தியத்தை திரும்பவும் நிலை நாட்டினார்.நான் இந்த வரலாற்று படத்தை சில தினங்களக்கு முன் பார்த்தேன் அதில் ஒரு நிகழ்வில் மார்டின் லூதரின் குரு அவர்கள் பல மரித்த பரிசுத்தவான்களின் உடமை களையும் அவர்களின் சிலை களையும் கண்பித்து இவைகளின் மூலம் ஒருவர் தேவபக்தியை பெருக்கலாம் என்று சொல்லுவார்.அதற்க்கு மார்டின்லூதர் இல்லை என்று மறுப்பார்.குரு கோபம் அடைந்தவராய் ,இவைகளின் மூலம் (சிலைகள் )ஒருவன் தேவபக்தியை 
    அடைய முடியாவிட்டால் வேறு எதினால் அடையமுடியும் என்று கேட்பார்.அதற்கு மார்டின்லுதர் கிறிஸ்துவே என்று ஆணித்தரமாக வாதிடுவார்.



    Comment (0)

    Thu, Jan 10th - 10:45AM

    மெளலவி பிஜே அவர்களுக்காக ஜெபம்



     http://www.facebook.com/Mycoimbatore.Venkatesan/posts/109143175899282
     மனிதனுக்கும் வியாதி வருவது என்பது தடுக்க முடியாத ஒன்றாகும்.சில நேரங்களில் ஏதோ ஒரு காரணங்களுக்காக வரும்.எல்லா வியாதிகளும் தண்டணையாக வந்தது என்றோ,அல்லது சோதனையாக வந்தது என்றோ காரணம் சொல்லிகொண்டிருக்க முடியாது. மதிப்பிற்குரிய மெளலவி பிஜே அவர்களுக்கும் நமக்கும் பல கருத்து வேறுபாடு இருந்தாலும், வேதாகமத்தையும், இயேசு கிறிஸ்துவையும் மிக கீழ்தரமாக விமர்சித்தாலும் நாம் அவரை நேசிக்கிறோம். அவரை போன்ற தாவா பிரசங்கிகளினால் தான் நாம் வேதாகமத்தை இன்னும் அதிகமாக படித்து ஆராய்ச்சி செய்ய தூண்டப்பட்டுள்ளோம்.இல்லை என்றால் நாமும் சாதாரண கிறிஸ்தவர்களை போல் ஆசீர்வாதங்களை மட்டுமே முன்னிலை படுத்தி ஏனோ தானோ என்று வாழ்திருப்போம்.மறைமுகமாகவே நமக்கு மவ்லவி பிஜே அவர்கள் நமக்கு ஒரு தூண்டுகோலாக இருந்தார் என்றால் அதை மறுப்பதற்கில்லை.

    மேலும் படிக்க...http://kristhavan.blogspot.com/2012/10/httpwww.html


    Comment (0)

    Thu, Jan 10th - 10:34AM

    கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள்? WHAT DO CHRISTIAN BELIEVE?



    தேவன் பற்றிய ஏழு விவரங்கள் (Seven Things About God):

    1. தனிச்சிறப்புமிக்க "தேவன் ஒருவரே" என்று நாங்கள் நம்புகிறோம். பைபிள் இப்படியாகச் சொல்கிறது (உபாகமம் 6:4): இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

    2. இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்தவர் "தேவன்". தன்னுடைய வார்த்தையினால் இவைகள் அனைத்தையும் உருவாக்கினார். பைபிள் சொல்கிறது:  (ஆதியாகமம் 1:3):தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. அவருடைய வார்த்தை மிகவும் சக்தி வாய்ந்தது.

    3. தேவனால் படைக்கப்பட்டவர்களாகிய நாம் எப்படி தேவனை அறிந்துக்கொள்ள முடியும்? மிகவும் சிறியவர்களும் அற்பமானவர்களாகிய நாம் எப்படி தேவனுடைய சிந்தனைகளை அறிந்துக்கொள்ள முடியும்?



    Comment (0)

    Thu, Jan 10th - 10:30AM

    நியூட்டன் கணித்த கிபி:2060



    ”கோள்களில்நிகழும் நகர்வுகளுக்கெல்லாம் ஈர்ப்புவிசையே காரணம், ஆனால் அந்த கோள்களையே நகரவைப்பது அந்த விசையல்ல. இறைவனே சகலத்தையும் ஆளுகிறவர்,அவரே எல்லாம் அறிந்தவர், அவருக்கே எல்லாம் தெரியும்”-சர் ஐசக் நியுட்டன் ஆல்பர்ட்ஐன்ஸ்டீனுக்கு அடுத்த படியாக நவீன உலகின் மிகப் பெரிய அறிவியல்
    மேதையாக கருதப்படுபவர் இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஐசக் நியுட்டன் (1643-1727). புவிஈர்ப்பு விசையை கண்டறிந்ததன் மூலம் அவர் உலகப் புகழ் பெற்ற 

    விஞ்ஞானியானார். ஆனால் இதே ஐசக் நியூட்டன் வேதாகமப் பிரியராகவும் அதிலும் குறிப்பாக தானியேலின் புத்தகத்திலும் வெளிப்படுத்தின விசேசம் புத்தகத்திலும் அவர் கொண்டிருந்த ஆர்வம் நாம் பலரும் அறியாதது. ஏன் உலகுக்கே சில ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிய வந்தது.

    விஞ்ஞானியாய் இருந்த காலத்திலேயே அவர் பல வருடங்கள் வேத ஆராய்ச்சியில் செலவிட்டுள்ளார். வேதாகம தீர்க்க தரிசனங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருவதை உணர்ந்த அவர், தபுத்தகமானது உலக வரலாற்றை முன்கூட்டியே தன்னில் எழுதிவைத்திருக்கின்றது என முழுவதுமாக நம்பினார். 

    மேலும் படிக்க...http://kristhavan.blogspot.com/2012/09/2060.html


    Comment (0)

    Thu, Jan 10th - 10:14AM

    பரிசுத்த ஆவியானவரும்-ஆள்தத்துவமும்



    கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் இன்றைக்கு மட்டும் அல்ல பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவத்தில் போலியான தந்திரமான பல உபதேசங்கள் இருந்து வந்துள்ளது.ஆனாலும் கர்த்தர் உண்மையான தேவ மனிதர்களை கொண்டு இந்த தந்திர உபதேசங்களை உடைத்து வந்துள்ளார்.ஆவியானவர் வெறும் ஆவியா?அல்லது ஆள்தத்து வமுடைய ஒரு நபரா? தேவனா?    இக்கட்டுரைல் பதில்.....

    அது போலவே திரித்துவம் கிறிஸ்தவ உபதேசமா? என்ற தலைப்பில்  ஆவியானவர் என்று ஒன்று இல்லை அது வெறும் தேவனின் வல்லமை தான் என்று வாதிட்ட நண்பர்கள் வேதத்துக்கு முரணான பல காரியங்களை சொல்லி தாங்கள் சொன்னதிலும் முரண்பட்டு வருகிறார்கள்.

    ஆனால் இதை படிக்கும் மற்றவர்களுக்கு தெளிவு உண்டாகும் படி ஆவியானவர் எப்படிப்பட்டவர் என்பதை வேத  வசன அதாரத்துடன் உங்களுக்கு ஒரு ஏழு காரியங்களை குறித்து வேதத்தில் இருந்தும்,மற்ற பரிசுத்தவான்களின் எழுத்துக்களில் இருந்தும் நான் கற்றுக்கொண்ட காரியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கட்டுரை கண்டிப்பாக ஆவியானவர் குறித்ததான குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

    மேலும் படிக்க....http://kristhavan.blogspot.com/2012/09/blog-post_9352.html
     

    Comment (0)

    Thu, Jan 10th - 10:09AM

    கண்கவரும் அற்புதங்கள் அபூர்வம் ஏன்?



    கண்கவரும் அற்புதங்கள் அபூர்வம் ஏன்? Bro.Stanley

     அற்புத சுகமளிக்கும் கூட்டங்களுக்கு இந்தியாவில் பஞ்சமில்லை. ஆனால் அற்புதங்கள் உண்மையில் நடைபெறுகின்றனவா என்றால் அது பெரியக் கேள்விக்குறியாக உள்ளது. அனைவரும் அற்புதங்களைக் கண்டு ஆச்சரியக்குறியை அல்லவா இடவேண்டும்??!!! ஏன் அற்புதங்கள் அற்புத சுகமளிக்கும் கூட்டங்களில் நடப்பதில்லை. ஒரு அலசல் கட்டுரை மட்டுமல்ல அற்புதங்கள் நம் வாழ்வில் நடக்க நம்மை உற்சாகப்படுத்தும் உண்மைக் கட்டுரையும்
    ஆகும்.
    ஒரு சிலர் சுகம்பெறுகின்றனர். ஆனால் கைப்பிரதிகளிலும் சுவரொட்டிகளிலும் செய்திமடல்களிலும் இக் கூட்டங்களைக் குறித்து நாம் பிரமாதமாக எழுதுவதெல்லாம் வெறும் வாய்ஜாலம்தான் என்பதைக் கிறிஸ்தவரும் கிறிஸ்தவரல்லாதோரும் நன்கறிவர். எடுத்துக்காட்டாக, உலக புகழ் பெற்ற சுகமளிக்கும் சுவிசேஷகர் ஏறத்தாழ அத்தனைபேரும் சென்னை நகரில் தங்கள் கூட்டங்களை நடத்திவிட்டனர். ஆனால் இன்றுவரை பொதுமக்களுக்கு நன்கு தெரிந்த கை,கால் சூம்பிய ஒரு தொழுநோயாளியோ, பிறவிச் சப்பாணியோ, பிறவிக் குருடனோ இக் கூட்டங்களில் பூரண சுகம் அடைந்ததாகத் தெரியவில்லை.

    மேலும் படிக்க...http://kristhavan.blogspot.com/2012/09/bro.html



    Comment (0)

    Thu, Jan 10th - 5:34AM

    கேள்வி: இயேசு கிறிஸ்து யார்?



    பதில்: இயேசு கிறிஸ்து யார்? கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்விக்கு மாறாக 
    ஒரு சிலரே இயேசு கிறிஸ்து என்ற ஒருவர் இருந்தாரா? என்ற கேள்வியை எழு
    ப்புகிறார்கள். இயேசு கிறிஸ்து உண்மையாகவே ஒரு மனிதன் என்றும் இஸ்ர
    வேல் தேசத்தில் ஏறத்தாழ 2000 ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர் என்பதுவும் 
    ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான கருத்தாகும். இதைக் குறித்த விவாதம் 
    யேசு கிறிஸ்துவின் முழு அடையாளங்களைக் குறித்து பேசப்பட்டபொழுது
     தான் துவங்கியது. எல்லா பெரிய மதங்கள் என்று அழைக்கப்படுகிறவைகளுமே 
    இயேசு கிறிஸ்து பெரிய தீர்க்கதரிசி என்றோ அல்லது ஒரு நல்ல போதகர் என்
    றோ அல்லது ஒரு தேவ மனிதன் என்றோ போதிக்கின்றன. ஆனால் பரிசுத்த
     வேதாகமம் அவரை தீர்க்கதரிசியிலும் பெரியவர் என்றும். அவரே நல்ல 
    போதகர் என்றும் அல்லது தேவ குமாரன் என்றும் கூறுகிறது.


    மேலும் படிக்க....http://kristhavan.blogspot.com/2012/09/blog-post_25.html


    Comment (0)

    Thu, Jan 10th - 5:26AM

    இயேசு மனிதன் என்பதையே கிறிஸ்தவம் போதிக்கிறது




    கிறிஸ்தவத்தின் மையம் இயேசு மனிதன் என்று நம்புவதே. இயேசு தனது புவி வாழ்க்கையில் முழுமையான ஒரு மனிதனாக, மனித இயல்புகளோடு வாழ்ந்தார் என்பது மட்டுமே கிறிஸ்தவ வாழ்வின் தூய்மையை உறுதிப்படுத்தவும், கிறிஸ்தவ வாழ்வில் நிலைப்படுத்தவும் வலிமையளிக்கிறது.
    மனித பலவீனங்களோடு வந்த இயேசு பாவங்களை முழுமையாக விலக்கி ஓர் தூய்மையான 
    வாழ்க்கை வாழ்ந்தார் என்பதும், நம்மைப் போலவே பல்வேறு சோதனைகளுக்கு உட்பட்டாலும் அந்த சோதனைகளை வெற்றி கொண்டார் என்பதுமே நமது வாழ்வில் நாம் தூய்மையைக் கடைபிடிக்க நமக்கு முழுமையான வலிமையைத் தருகிறது.
    என்னைப் பின்செல்
    என்பதே இயேசுவின் போதனை. இயேசு எதையெல்லாம் வாழ்நாளில் கடைபிடித்தாரோ அதை மட்டுமே போதித்தார். பழைய ஏற்பாடுகள் எல்லாம் சட்டங்களை மட்டுமே வகுத்துக்கூறுகையில் இயேசு மட்டுமே வாழ்க்கையை வாழ்ந்து நாமும் அதைப் போல வாழ நமக்கு ஊக்கமளிக்கிறார்.

    மேலும் படிக்க...http://kristhavan.blogspot.com/2012/09/blog-post.html



    Comment (0)

    Thu, Jan 10th - 4:35AM

    கிறிஸ்தவம் என்றால் என்ன?



    பதில்:
     1கொரி.15:1-4 சொல்கிறது, அன்றியும் சகோதரரே நான் உங்களுக்கு பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். நீங்கள் அதை கைக்கொண்டால் அதனாலே இரட்சிக்கப்படுவீர்கள் .மற்றபடி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்கும். நான் அடைந்ததும் உங்களுக்கு பிரதானமாய் ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,அடக்கம் பண்ணபட்டு, வேதவாக்கியங்களின் படி மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார்”. கிறிஸ்தவர்கள் வேதவசனங்கள் 

    தேவனால் அருளபட்டவை என்றும் அதில் எந்த பிழைகளும் இல்லை என்றும் பிதா,குமாரன்,பரிசுத்த ஆவி ஆகிய மூன்று தன்மைகளில் தேவன் நம்மை வெளிபடுத்துகிறார் என்றும் விசுவாசிக்கின்றனர் (2தீமோ 3:16,7, 2பேது 1:20-21).


     



    Comment (0)

    Back to Blog Main Page


    About Me

    Name: robert dinesh
    ChristiansUnite ID: dinesh
    Member Since: 2013-01-10
    Location: batticaloa, Sri Lanka
    Denomination: free church
    About Me: iam a tamil christian in srilanka

    Jan. 2013
        1 2 3 4 5
    6 7 8 9 10 11 12
    13 14 15 16 17 18 19
    20 21 22 23 24 25 26
    27 28 29 30 31    
    prev next


    More From ChristiansUnite...    About Us | Privacy Policy | | ChristiansUnite.com Site Map | Statement of Beliefs



    Copyright © 1999-2019 ChristiansUnite.com. All rights reserved.
    Please send your questions, comments, or bug reports to the